டிசிஎஸ் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – உடனே விண்ணப்பிக்கவும்!
பி.இ., பி.டெக் மற்றும் இதர படிப்புகள் படித்து வரும் மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது என்பதற்குரிய முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனம்
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்பிற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பி.இ., பி.டெக் மற்றும் இதர படிப்புகள் படித்து வரும் மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த டிசிஎஸ் இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு முயற்சிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசிஎஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 200 பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ஜூலை 31 க்குள் இதை செய்தால் மட்டுமே ரூ.2000 கிடைக்கும்!
அதாவது, B.Tech, BE இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் ஆராய்ச்சி செய்ய விரும்பும் M.Tech, MS, Ph.D மாணவர்கள் இந்த டிசிஎஸ் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உளவியல், சமூகவியல், பொருளாதாரம், கணிதம், விளையாட்டு வடிவமைப்பு, நிறுவன நடத்தை போன்ற பாடங்களில் முதுகலை மற்றும் பிஎச்டி படித்தவர்களும் டிசிஎஸ் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை குறுகிய இன்டர்ன்ஷிப் மற்றும் 16 வாரங்கள் முதல் 18 வாரங்கள் வரை நீண்ட இன்டர்ன்ஷிப்பை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், விருப்பமும் தகுதியும் பெற்ற மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால் [email protected] என்கிற மின்னஞ்சல் ஐடி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். அதாவது, பெயர், தகுதிகள், கல்லூரி பெயர் ஆகியவற்றை சரியாக பதிவு செய்து தகுதியான படிப்பு பற்றிய விவரங்களை வெளியிடவேண்டும். பின்னர், மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.