பொதுமக்களின் மனநல சிக்கல்களை தீர்க்க புது App – TCS நிறுவனத்தின் முயற்சி!
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS தற்போது மக்களின் மனநல பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் புதிய செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
புதிய செயலி:
நாட்டின் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள டாடா நிறுவனம், தான் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகளிலும் தனது பங்கை சிறப்பாக செய்து முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில், TCS நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய செயலி ஒன்றை தொடங்கியுள்ளது. பொதுமக்களின் மனநல சார்ந்த சிக்கல்கள் மற்றும் பழக்கங்களை சீரமைக்கும் வகையில் இந்த செயலி செயல்படும்.
WhatsApp-ல் இது புதுசு.. இனி Status பார்ப்பது சுலபம் – பயனர்களுக்கு வர இருக்கும் புதிய அம்சம்!!
Exams Daily Mobile App Download
மேலும், தினசரி பயனர்களின் மனநிலை குறித்த தகவல்களை பெற்று, விளையாட்டுகள் அல்லது சில எளிய பழக்கவழக்க மற்றும் நடைமுறைகளின் மூலம் அவர்களின் மன அழுத்தம் மற்றும் கவலைகளை நீக்க இந்த செயலி உதவுகிறது. மேலும் இந்த செயலியின் மூலம் தீராத சிக்கல்களை மருத்துவர்களுடன் ஆலோசிக்க அறிவுறுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகளை கையாள்வதற்காக TCS நிறுவனம் காப்பீடு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.