TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – 1200 பேரை பணியமர்த்த திட்டம்!
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையிலும் அதிக லாபத்தை ஈட்டும் வகையிலும் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஐடி துறைகளில் நிகழ்ந்து வரும் வேலை நீக்கத்திற்கு மத்தியில் புதிய பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
உலகம் முழுவதும் ஐடி துறையினர் வருவாய் இழப்பு, மூன் லைட்டிங், பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ள தாக்கம் ஆகியவற்றுடன் போராடி வருகின்றனர். இதற்கு மத்தியில் தங்களின் நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக முன்னணி ஐடி நிறுவனங்களான HCL, TCS, WIPRO உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம் புதிய பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி TCS நிறுவனம் இந்த ஆண்டு மொத்த வருமானத்தின் அளவு 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022ம் ஆண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 19,690 ஊழியர்களை புதிதாக பணியமர்த்தியது.
நாளையும் (நவம்பர் 12) இந்த மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு..!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து வரும் ஆண்டில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் 1,200 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளில் TCS நிறுவனம் இல்லினாவில் 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.