மத்திய அரசில் மதிப்பெண் அடிப்படையில் வேலை – உதவித்தொகை: ரூ.8000/-
தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா (TCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentice Trainee பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
TCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் Technician Apprentice Trainee பணிக்கு Architecture / Electrical / Electronics & Communication / Information Technology / Computer Science / Civil Engineering போன்ற துறைகளில் தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8000/- வழங்கப்படும்.
- Merit List, Certificates Verification மற்றும் Interview போன்றவற்றின் மூலம் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TCIL விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 15.02.2022 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு NATS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்னும் 3 நாட்களில் முடிவதால் (15.02.2022) இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி தகுதியவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.