தமிழகத்தில் கடைகள் மீதான வரி 6 மாதங்களுக்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் கடைகள் மீதான வரி 6 மாதங்களுக்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கடைகள் மீதான வரி 6 மாதங்களுக்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கடைகள் மீதான வரி 6 மாதங்களுக்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் கடைகளின் இயக்க நேரத்தை அதிகரிப்பது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், கடைகள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வரி ரத்து கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் 2 ஆயிரமாக குறைந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கமானது ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவைகளின் இயக்கத்திற்கு மட்டும் அரசு அனுமதி கொடுத்துள்ளது.

ஞாயிறுதோறும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை – நாளை முதல் அமல்!

இதனிடையே கடைகள் இயக்க நேரத்திற்கு கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்படும் என வணிகர்களும், வணிகர் சங்கமும் எதிர்பார்த்திருந்த வேலையில், இது குறித்த அறிவிப்புகள் வராதது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகத்தில் கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் அதிகளவு வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து கடைகளை திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது என்ற போதிலும் சில அரசு அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது போன்ற செயல்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் வணிகர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அபராதங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு, நோய்த்தொற்று காலத்தில் வணிகர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் திரும்ப பெற வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் இயக்கத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். மேலும் கடைகள் செயல்பட்டு வரும் வளாகங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வரி போன்றவற்றை ஆறு மாத காலத்திற்கு அரசு ரத்து செய்ய வேண்டும். வணிகர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்’ என அரசுக்கு கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!