EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – வரிச்சலுகை குறித்த விவரம் இதோ!
வருங்கால வைப்பு நிதியின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கிறது. இது குறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் காண்போம்.
பிஎப் தொகை:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகின்றனர். பணிக்காலம் நிறைவு பெற்ற பின் பிஎப் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அவ்வபோது ஈபிஎப்ஓ புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! அரசு எடுக்கப்போகும் முடிவு?
2020-21 ஆம் ஆண்டுக்கு PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி வட்டி விகிதங்களை விட அதிகமாகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் வட்டித்தொகையும் கிடையாது. பிஎப் திட்டத்தில் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரிச்சலுகையும் கிடைக்கிறது. பிஎப் திட்டம் சம்பளம் ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஒரு சேமிப்பாகவும், முதலீடாகவும் உள்ளது. இதில் முதலீடு அதிகரிக்கும் போது வட்டியும் அதிகரிக்கும். இந்த சேமிப்பு நிதியினை இடையில் திரும்ப பெறுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறையும்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு இடைவேளைக்கு தட்டு, டம்ளர்!
வருங்கால நிதி அமைச்சகத்தில் ஊழியர் ஓய்வூதிய திட்டமும் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவார்கள் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஊழியருக்கு 58 வயது ஆகும் போது இந்த திட்டத்தில் மாத ஓய்வூதியத்தை பெறலாம். பிஎப் கணக்கு தொடங்கும் நபர் 10 வருடங்களுக்கு பிறகு EPS திட்டத்தில் இருந்து விலகினால் EPF திட்டத்திற்கான பங்களிப்பு புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.