டாட்டா நிறுவனத்தில் ரூ.29,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
டாடா நினைவு மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Nurse பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- டாட்டா நினைவு மையம் (TMC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் Nurse பதவிக்கு என 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் General Nursing & Midwifery plus Diploma in Oncology Nursing அல்லது B.Sc.(Nursing) / Post Basic B.Sc.(Nursing) டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Indian Nursing Council / State Nursing Council களில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.
TN Job “FB Group” Join Now
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Nurse பணிக்கு 50 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் குறைந்த பட்சம் ஒரு வருடம் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே 30 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கு ரூ.29,000/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு நேரடியாக Interview வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் Interview ஆனது 16.06.2022 அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
CDAC கணினி மையத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.