டாடா குழும ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அதிரடி அறிவிப்பு!!
டாடா நிறுவனம் தனது ஊழியர்களுக்காக ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற பல முக்கிய அதிரடி அறிவிப்புகளை அறிவித்துள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொரோனா எதிரொலி:
கடந்த ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக டாடா குழும நிறுவனங்களின் வருவாயானது பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்நிறுவனம் மூத்த அதிகாரிகளுக்கு 20% ஊதியத்தினை குறைத்தது. இதனால் ஊழியர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். மேலும் டாடாவின் பல நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டது.
2021- 2022 நிதி ஆண்டில் இந்தியா 12.8% வளர்ச்சி அடையும் – தரமதிப்பீடு நிறுவனம் ஆய்வு!!
அறிவிப்புகள்:
தற்போது டாடா நிறுவனம் சரிந்த பொருளாதாரத்தில் இருந்து சற்று மீண்டு வந்துள்ளது. இதனால் அதன் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியத்தினை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் இருந்து உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வழக்கமாக 6-8% ஆக உயர்த்தப்படும் ஊதியமானது, இம்முறை 12-14% வரை உயர்த்தப்படுகிறது. அதனோடு ஊழியர்களுக்கான பதவி உயர்வும் அளிக்கப்பட உள்ளது.
சுற்றுலாத்துறை:
கொரோனா தொற்றிற்கு பிறகு நாட்டில் சுற்றுலாத் துறையானது இன்னும் மீண்டு வரவில்லை. அதற்கான வருவாய் குறைந்துள்ள நிலையில் ஆகும் செலவினங்கள் மட்டும் அதிகரித்துள்ளது. இதனால் டாடா குழுமத்தின் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியம் உயர்தப்படவில்லை.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்