தமிழகத்தில் பிப்ரவரி 5 அன்று டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அடைப்பு
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டும் முக்கியமான துறைகளில் ஒன்று மதுபான விற்பனை. இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அரசு விடுமுறை, தலைவர்களின் பிறந்த தினங்கள், பண்டிகை காலங்களில் மூடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
சென்னை – வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை தொடக்கம் – மார்ச் 26 முதல்! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
அதாவது, வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் அனைத்தும் பிப்ரவரி 5, ஞாயிற்றுக்கிழமை அன்று அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள், கூடங்கள், உணவு விடுதிகள், மனமகிழ்வு மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.