மதுபான கடைகள் 44 நாட்களுக்கு பிறகு திறப்பு – அலைமோதிய கூட்டம்!
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 44 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுக்கடைகள் திறப்பு:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. தொற்றை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முன்களப் பணியாளர்கள் அரசுடன் இணைந்து வைரஸ் பரவலை தடுக்க முயற்சித்து வருகின்றனர். ஆனாலும் தொற்று பரவல் குறையாமல் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரிசோதனைகள் மூலம் நோயாளிகள் எளிதாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அரசு கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
தமிழக மக்களின் பேரிடர் கால உதவிக்கு வாட்ஸ்அப் எண் – அரசு அறிமுகம்!
உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் தாக்கத்தால் புதுச்சேரி அரசு கடந்த ஏப்ரல் 24 ம் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்து அரசு கடும் கட்டுப்பாடுகளையும் பிறப்பித்தது. அத்யாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை அனுமதியளித்தது. மற்ற கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் திறக்க முற்றிலும் தடை விதித்து. பொதுப்போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மதுபான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த கடும் ஊரடங்கு காரணத்தால் புதுச்சேரியில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் காலை 6 முதல் மாலை 5 வரை திறந்து இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .44 நாட்களுக்கு பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதனால் ஏராளமான மதுப்பிரியர்கள் ஒரே நேரத்தில் குவிந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். பார்களில் அமர்ந்து மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.