தமிழகத்தில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி? இன்று அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி? இன்று அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி? இன்று அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி? இன்று அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 14 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? அவ்வாறு நீடிக்கப்பட்டால் எவ்வாறான தளர்வுகள் வழங்கப்படும்? டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? என்பது குறித்த அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியது.

ஜூன் 18 வரை ஆறு உள்ளாட்சி அமைப்புகளில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இதனால் ஜூன் 7 முதல் ஜூன் 14 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன் படி அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகின்றன. ஆனால் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீடிக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை அமலில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு 17 ஆயிரமாக குறைந்தாலும் தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதனால் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அவ்வாறு ஊரடங்கு ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் மேலும் நீடிக்கப்பட்டால் பின்வரும் தளர்வுகள் வழங்க வாய்ப்புள்ளது. அவை,

  • தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு முறை நீக்க வாய்ப்புள்ளது.
  • நீண்ட நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்காமல் உள்ள நிலையில், புதுச்சேரியை போல பார்கள் திறக்கப்படாமல், நேர கட்டுப்பாடுகளுடன் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க வாய்ப்புள்ளது.
  • கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
  • சலூன் கடைகள், தேநீர் கடைகள் இயங்க அனுமதி வழங்கலாம்.
  • பொதுப்போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்படும்.
  • தனியார் நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படலாம்.
  • மேலே குறிப்பிட்டுள்ள தளர்வுகள் குறித்து முதல்வரிடம் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து இறுதி முடிவினை முதல்வர் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!