தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் – தகவல் வெளியீடு!
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தற்போது தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
தமிழக அரசின் வருவாய் ஈட்டும் ஒரு முக்கிய அரசுத்துறை நிறுவனமான டாஸ்மாக் கடைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்தடுத்து கொரோனா பேரலைகள் தீவிரமடைந்து வந்ததினால் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளாக கடந்த ஆண்டு இறுதியில் டாஸ்மாக் கடைகளில் திறக்கப்பட்டு விற்பனை துவங்கியது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு – இன்றைய நிலவரம்!
ஆனால் கொரோனா 2 ஆம் அலை பரவலால் இந்த ஆண்டு மே மாதம் முதல் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட கடைகள் தற்போது மீண்டுமாக திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாததால், அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை மாநகரில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பரவல் எதிரொலி!
அதாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சென்னை காசிமாயன் டாஸ்மாக் விற்பனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் 2010-11 ஆண்டில் ரூ.3.56 கோடி , 2011-12 ஆண்டில் ரூ.1.12 கோடி, 2012-13 ஆண்டில் ரூ.103.64 கோடி, 2013-14 ஆண்டில் ரூ.64.44 கோடி, 2019-20 ஆண்டில் ரூ.64.44 கோடி என்ற அளவில் 5 ஆண்டு காலமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2004-05 ஆம் நிதியாண்டில் தான் டாஸ்மாக் விற்பனையில் அதிகபட்சமாக ரூ.232.73 கோடி லாபம் கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.