சனிக்கிழமைகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதி – கேரள அரசு!
கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் கேரள மாநிலத்தில் சனிக்கிழமைகளிலும் மதுபான கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகள்:
கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆங்காங்கே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் தாக்கம் குறைந்த நிலையில் தளர்வுகளும் வழங்கப்பட்டது. ஆனால் கேரளா மாநிலத்தில் தற்போது வரை நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. கேரள மாநிலத்தில் இரண்டாம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 – தங்க மகன் ஆவாரா நீரஜ் சோப்ரா?
கேரளா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் 19,948 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளா மாநிலம் தளர்வுகளை வழங்கி வருகிறது. இது குறித்து மருத்துவ குழு தனது எதிர்ப்பை தெரிவித்தும் மாநில அரசு ஊரடங்கில் தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது கேரளாவில் மதுக்கடைகளுக்கு கொடுக்கப்பட்ட வார விடுமுறை தவிர்க்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
கேரளா மாநிலத்தில் கேரளா மதுபான கழகத்திற்கு சொந்தமான மதுபான கடைகளுக்கு வார விடுமுறை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் திறக்கபட்டிருந்தது. மேலும் மதுபானங்களை வாங்கி செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கேரளா அரசுக்கு சொந்தமான மதுபான கடைகளும் சனிக்கிழமை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா மாநிலம் முழுவதும் 150 மதுபான கடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கேரளாவில் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.