ஆகஸ்ட் 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் விதியை மீறி மது விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மது விற்பனைக்கு தடை :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மீண்டும் தீவிரம் எடுத்து பரவி வருகிறது. இது கொரோனா மூன்றாம் அலையாக இருக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ வல்லுநர் குழு எச்சரித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதை செலுத்துவதற்கான இறுதி கட்ட சோதனையில் உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 15 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி – ஐசிசி அதிரடி!
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்யவும், சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவாங்க முற்படுவார்கள். இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்படும் கடைகள் மதுபானக் கடைகள் அனைத்தும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதியை மீறி மது விற்பனை செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.