தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரைக்கும் வல்வில் ஓரி விழா நடைபெற இருப்பதால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரைக்கும் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது, சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் விதமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த இரண்டு நாட்களும் அரசு விழாவாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்தாண்டு வல்வில் ஓரி விழா வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த விழாவிற்காக அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள், மூலிகை செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெற இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் அனைவரும் கொல்லிமலை பகுதிக்கு வர இருப்பதால் ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி
மேலும், வல்வில் ஓரி மன்னரின் வீரத்தை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரைக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.