தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த மாதத்தில் மட்டும் 4 நாட்களுக்கு அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பார்களுக்கு 4 நாட்கள் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மற்றும் 9 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு தேர்வை முன்னிட்டு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த வகையில் பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த வகையில் ஜனவரி 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18 ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு அந்நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுக்கடைகளை, கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
இதனால் மேற்கண்ட 4 நாட்களில் டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக அடைக்கப்படுகிறது. இந்த வகையில் முதல்வர் அறிவிப்பின் அடிப்படையில் வருகிற 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்க உள்ளது. முழு ஊரடங்கு அன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது மற்றும் ஹோட்டல்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி வழங்கப்படும். எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் பார்கள் மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.