தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – அரசு உத்தரவு!
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மதுபானக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள்:
கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் சற்று குறைந்து வந்த நிலையில் நாற்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது பிப்ரவரி 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானதை அடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் வேகமெடுத்துள்ளது.மேலும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
TN TRB முதுகலை ஆசிரியர் வேலைவாய்ப்பு – இன்று முதல் தொடங்கிய தேர்வு! தேர்வர்கள் மும்முரம்!
பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுவதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் நாளன்று (பிப்ரவரி 14) பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வாக்குரிமை உள்ள குடிமக்களுக்கு அன்றய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மின்சார வாரியத்தில் 45000 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு
அதனை தொடர்ந்து தற்போது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடைபெறும் பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் பிப்ரவரி 17,18,19,22 ஆகிய 4 நாட்கள் மூடப்பட வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.