டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு, ‘இது’ இல்லைனா மதுபானம் கிடையாது – அரசு அதிரடி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை கட்டுப்பாடு
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை என இரவு நேர ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பின்பற்றப்படும். மேலும் வருகிற 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் அனைவரும் ரூ.5000 கொரோனா உதவித்தொகை? உண்மை நிலவரம் இதுதான்!
இந்நாளில் பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகள் செயல்படாது என்றும் அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனை கட்டுப்படுத்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. அத்துடன் பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகளை தற்போது அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மத வழிபாட்டு தலங்கள் மூடல் – பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
இந்த அறிவிப்பின் படி, மதுபான விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமான முறையில் முக கவசம் அணிவது மற்றும் கையுறை அணிவது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். இதையடுத்து முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.