தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் மூடல் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து துறைகளும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற மே 1ம் தேதி அன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு விழுப்புர மாவட்ட நிர்வாகம் அனைத்து மதுபான கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் மூடல்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு அமலில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1ம் தேதி அன்று தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
உலக தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலைக்கு பின்னால் இருப்பது நூறு ஆண்டுகளுக்கு முன் பாட்டாளி மக்கள் நடத்த போராட்டம் மிகவும் முக்கியமானதாகும். 18ம் நூற்றாண்டில் உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதனால் இதனை எதிர்த்து பல போராட்டங்கள் வெடித்தன. அதன் விளைவாகவே நாம் இப்போது 8 மணி நேர வேலையை அனுபவித்து கொண்டிருக்கிறோம். இதனை கொண்டாட உருவான தினம் தான் மே தினம் ஆகும்.
Exams Daily Mobile App Download
இந்த தினம் எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும். அதனால் இத்தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விழுப்புர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் கூறியதாவது, வருகிற மே தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், அரசு மதுக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள், தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.