தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பார்கள் மூடல் – நீதிபதியின் உத்தரவிற்கு தடை!
டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிபதியின் உத்தரவிற்கு ஐகோர்ட் முதன்மை அதிகாரி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மதுபான பார்கள் மூடல்:
தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மதுக்கடைகள் உள்ளன. அரசிற்கும் மதுபான கடைகளின் மூலமாக தான் அதிக அளவில் வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளுடன் இருக்க கூடிய பார்கள், தின்பண்டம் விற்பனை மற்றும் காலிப்பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்!
கொரோனா கால கட்டத்தில் மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த நீதிபதியின் உத்தரவை மீறி டாஸ்மாக் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
பார்களை நடத்துவதற்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு முழு உரிமை உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்கிற நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு முதன்மை அமர்வு அந்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் டாஸ்மாக் நிர்வாகம், பார்கள் நடத்துவதற்கான டெண்டர்களை வெளியிடலாம் எனவும் அறிவித்துள்ளது.