தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி உத்தரவு!
நீலகிரி மாவட்டத்தில் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகள், கிளப்கள், ஹோட்டல் பார்கள், ஆகியவற்றில் மதுபானங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றன. ரேஷன் கடைகளில் கூட கூட்டம் விரைவாக குறைந்து விடும். ஆனால் மது கடைகளில் மட்டும் கூட்டம் எப்போதும் குறைவதே இல்லை. அதனால் மதுபான உற்பத்தி மிக அதிகமாக தயாரிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக 4 மாதத்திலிருந்து 5 மாதத்திற்கு மதுபானங்களை விற்க தடை விதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த தடையை மீறியும் மதுபானங்களை விற்பனை செய்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அரசு தமிழக குடிமகன்கள் தலையில் இடி விழுந்த மாதிரி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மே தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகள், கிளப்கள், ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.
ExamsDaily Mobile App Download
மேலும் மதுபானக்கடைகளை திறந்திருப்பதாக தகவல் பொதுமக்களுக்கு கிடைத்தால் விவரத்தை அந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு 0423-2234211 என்ற எண்ணிற்கு மற்றும் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளரை 0423-2223802 எண்ணிலும், ஆயத் துறை உதவி ஆணையரை 0423-2443693 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.