தமிழகத்தில் மதுபான கடைகள் நிரந்தரமாக மூடல் – அரசிடம் வலியுறுத்தல்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது தலைமையிலான மாநில அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் நிரந்தரமாக மூட முன் வர வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மதுபான கடைகள்:
தமிழகத்தில் வருகிற 14ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் வருகிற நாட்களில் சில மாவட்டங்களில் புதிய தளர்வாக மதுக்கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்து தமிழக மாநில பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் மதுபான கடைகளை மூட தமிழக அரசு முன் வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீடியோ வழியில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் – கல்வி தொலைக்காட்சி!
மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020 கொரோனா காலத்தின் போது திறக்கப்பட மதுக்கடைகள் எதிர்த்து தற்போதைய முதல்வரும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதுக்கடைகள் திறப்பு எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது அவரது தலைமையிலான அரசு புதிய தளர்வாக மதுக்கடைகளை திறக்க திட்டம் தீட்டுவது முறையல்ல. மதுக்கடைகள் மூடப்பட்டால் அரசின் வருமானம் பாதிக்கும் என்பதை தொடர்ந்து கூறக்கூடாது.
TN Job “FB Group” Join Now
மதுக்கடைகள் மூடப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்வதற்கு பல வழிகள் உள்ளன. தமிழக அரசு கொரோனா தொற்றை விரட்டுவதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீணாகி விடும் என்று அவர் தெரிவித்தார். மேலும் வேலை இன்றி மக்கள் தவிக்கும் இந்த காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று தனது கருத்தை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.