தமிழகத்தில் அக்.19ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – கலெக்டர் உத்தரவு!
தமிழகத்தில் மிலாடிநபி பண்டிகையை முன்னிட்டு வேலூரில் அரசு மற்றும் அரசு சாரா அனைத்து மதுபான கடைகளும் அக்.19ம் தேதி அடைக்கப்பட வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டாஸ்மாக் அடைப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின்படி வரும் மூன்றாம் மாதத்தில் மிலாடிநபி கொண்டாடப்படுகிறது. இத்தகைய மிலாடிநபி பண்டிகையானது அம்மாதத்தில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதியானது மாறுபடக்கூடியது. ஏனெனில் இத்தகைய பண்டிகை இசுலாமியர்களின் சந்திர நாட்காட்டியின்படி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மிலாடிநபி பண்டிகை வருகின்ற அக்டோபர் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இப்போது தான் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகின்றனர்.
TNPSC குரூப் 2 தேர்வு, 1338 காலிப்பணியிடங்கள் – போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்க்கு 3 ஆண்டுகள் தடை!
கொரோனாவின் காரணமாக வெகு காலமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. தமிழகத்திற்கு அதிக வருமானம் வரக்கூடிய ஒன்றாக உள்ள டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. பொருளாதார நிதி நெருக்கடியின் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. தற்போது மிலாடிநபி பண்டிகையின் காரணமாக டாஸ்மாக் கடைகள் அன்று அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகள் பொறுத்தவரை அரசு சார்ந்து பல கடைகளும், மேலும் அரசு சாராமல் தனியார் பார்களும் இயங்கி வருகின்றன.
சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் வருகின்ற அக்.19ம் தேதி மிலாடிநபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், அதனை சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற ஹோட்டல்களில் செயல்படும் பார்கள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும் என்று அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், உத்தரவை மீறி அன்றைய தினம் மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் பணியாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.