தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அம்மாட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வர். மேலும் இந்தாண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2021: வெற்றியை தொடருமா தோனியின் படை? இன்று SRH vs CSK பலப்பரீட்சை!
அதனை தொடர்ந்து காந்தி ஜெயந்தி அன்று எப்போதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் உரிமம் பெற்ற பார்கள் போன்றவற்றை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் சம்பளம், PF, ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய ஊதியக் குறியீடு!
மேலும் விதியை மீறி திறந்து விற்பனை செய்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதங்களில் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கின் போது 100 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க தொடர் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 2ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.