புதுச்சேரியில் மதுபான கடைகள் மூடல்? கலால் துறை ஆணையர் விளக்கம்!!
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைவு காரணமாக நேற்று முன்தினம் முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், அவை மீண்டும் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் இருந்து வெளிவரும் செய்திகளுக்கு கலால் துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுபான கடைகள்:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கப்பட்டு தற்போது வரை அமலில் உள்ளது. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று குறைந்ததால் புதுச்சேரி அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை லயோலா கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 – புதிய அறிவிப்புகள் வெளியீடு!
மத வழிபாட்டு தளங்கள் திறக்கவும், பஸ், டாக்ஸி, ஆட்டோ இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அங்கிருந்து புதுச்சேரிக்கு வந்து மது வங்குவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மதுபான கடைகள் மூட அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கூறுகையில், மதுபான கடைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை நம்ப வேண்டாம். மதுக்கடைகளை மூடுவது குறித்து கலால் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்.