தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மதுபான கடைகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனைக்கான நேர கட்டுப்பாடுகள் மற்றும் டோக்கன் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதனால் ஏப்ரல் 26 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி டாஸ்மாக் பார்களை மூட அரசு உத்தரவிட்டது. டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளதால் அதன் மூலம் கொரோனா பரவும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே மதுபான விற்பனை கடைகளை மூட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, கொரோனா 2வது அலை அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.