கால்நடை மருத்துவப் படிப்புகள் – விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆனது கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதியினை நீட்டிப்பு செய்து இருப்பதாக செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் விண்ணப்பித்தல் பணிகள் நடைபெறு வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக நடைபெறு வருகிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இந்த விண்ணப்பித்தல் பணிக்கு முன்னர் செப் 28 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த கடைசி தேதி வரும் அக்டோபர் மாதம் 09 ஆமா தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்