TANGEDCO நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – ரூ.8,050/- உதவித்தொகை!!
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திருவாரூர் மாவட்ட துர்காலயா பகுதி மின்சார விநியோக வட்டத்தில் இருந்து Electrician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – TANGEDCO |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
TANGEDCO கழகத்தின் திருவாரூர் மாவட்ட துர்காலயா பகுதி மின்சார விநியோக வட்டத்தில் Electrician பணிகளுக்கு என 05 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
TANGEDCO கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS உதவித்தொகை :
குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.