10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – தேர்வு கிடையாது…!
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Electrical Thermal Power Plant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) வெளியிட்ட அறிவிப்பில் Electrical Thermal Power Plant பணிக்கு என மொத்தமாக 214 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ பள்ளிகளில் 10 ம் வகுப்பு தேர்ச்சியை பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- Electrical Thermal Power Plant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை உதவி தொகையாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 11.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.