10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வில்லாமல் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) காலியாக உள்ள Electrical Thermal Power Plant பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 215 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணியை பற்றிய முழு விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tamil Nadu Electricity Board (TANGEDCO) |
பணியின் பெயர் | Electrical Thermal Power Plant |
பணியிடங்கள் | 215 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தமிழ்நாடு மின்சார வாரியம் காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) வெளியிட்ட அறிவிப்பில் Electrical Thermal Power Plant பணிக்கு என மொத்தமாக 214 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Electrical Thermal Power Plant கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ பள்ளிகளில் 10 ம் வகுப்பு தேர்ச்சியை பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
Electrical Thermal Power Plant உதவி தொகை:
Electrical Thermal Power Plant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை உதவி தொகையாக பெறுவார்கள்.
TANGEDCO தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TANGEDCO விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய முகவரி இணைப்பின் மூலம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் 11.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.