TANGEDCO தமிழக மின்வாரியத்தில் 5,318 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து – ஷாக் உத்தரவு!
தமிழக மின்வாரியத்தில் காலியாக இருக்கும் 5,318 பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் TNPSC மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாணை ரத்து
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TNPSC மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை TNPSC சார்பில் குரூப் 2 மற்றும் 2A தேர்வு நடத்தப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் குரூப் 4 தேர்வும் இதை தொடர்ந்து TET தேர்வும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கடந்த ஆண்டு இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
முல்லை கதிர் வீட்டிற்கு வரும் தனம், வீட்டு வேலைகளை தனியாக செய்ய கஷ்டப்படும் மீனா – இன்றைய எபிசோட்!
அந்த வகையில் தமிழக மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர்கள் கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக இருக்கும் சுமார் 5,318 பணியிடங்கள் நிரப்பிட இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து இந்த காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் கொரோனா பரவல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நிமித்தமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக மின்சார வாரியத்தில் புதிய ஆட்சேர்ப்புக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை தற்போது ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில், அனைத்து மாநில அரசுத் துறைகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை TNPSC மேற்கொள்ளும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதால் மின்வாரிய பணிகளுக்கான அறிவிப்பாணை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இந்த தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.