பாண்டியன் உடன் கடை வேலைகளை கவனிக்கும் தனம், புது வேலையில் கஷ்டப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கடையில் வேலைகளை எல்லாம் கவனிக்க ஜெகா அதை பார்த்து வருத்தப்படுகிறார். பின் மீனா இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள கஷ்டமாக இருப்பதாக சொல்ல தனம் பாண்டியனை உடன் அழைத்து செல்கிறார். கதிர் புது வேலையில் கஷ்டப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தை பார்க்க ஜெகா கடைக்கு வருகிறார். அப்போது தனம் நிற்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். தனத்தை பார்த்து பேசலாம் என அவர் நினைக்க ஆனால் தனம் நிற்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். தனம் எதாவது சாப்பிடுகிறாயா என அண்ணனிடம் கேட்க நீ முதலில் உட்காரு என அவர் சொல்கிறார். உனக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கும் குழந்தையை வேற பார்த்துக் கொள்ள வேண்டும் அத்துடன் ஏன் கடையில் வந்து கஷ்டப்படுகிறாய் என ஜெகா கேட்கிறார்.
Exams Daily Mobile App Download
மாமாவிற்கு உடம்பு சரியில்லை என்றால் நான் தான எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என தனம் சொல்கிறார். ஜீவா தான் பார்க்கிறாரே என ஜெகா சொல்ல அவன் ஒரே ஆளாக தனியாக பார்த்துக் கொள்ள முடியாது என தனம் சொல்கிறார். தனம் முடிவு செய்துவிட்டால் மாற்ற முடியாது என்பதால் ஜெகா எதுவும் பேசாமல் இருக்கிறார். மறுபக்கம் கதிருக்காக முல்லை சமைத்து கொண்டிருக்கிறார். கதிரும் ஹோட்டல் வேலைகளை கடுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது இன்னும் வரவில்லை என நினைத்து முல்லை கதிருக்கு போன் செய்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா, தவித்து போகும் இனியா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
அப்போது கதிர் டேபிள் துடைத்து கொண்டிருக்க போனை எடுத்து பேசுகிறார். இன்னும் வரவில்லையா என கேட்க இங்கே வேலை இருப்பதாக கதிர் சொல்கிறார். அப்போது முதலாளி வந்து வேலை செய்யும் நேரத்தில் இப்படி பேசிக் கொண்டே இருக்க கூடாது என சொல்கிறார். தம்பி வேலை செய்யும் போது போன் பேசினால் சரியாக வேலை செய்ய முடியாது என சொல்கிறார். பின் கதிர் வீட்டிற்கு சென்று வருகிறேன் என சொல்ல ஆனால் முதலாளி வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார். ஆனால் முல்லை கதிர் வருவார் என காத்திருக்கிறார்.
மீண்டும் கதிருக்கு போன் செய்ய ஆனால் கதிர் என்னால் வர முடியாது என சொல்கிறார். இரவு வந்து நான் சாப்பிடுகிறேன் நீ சாப்பிடு என சொல்கிறார். முல்லை வருத்தத்துடன் சரி என சொல்லிவிட்டு சாப்பிட தொடங்குகிறார். ஆனால் அவருக்கு தனியாக சாப்பிட பிடிக்கவில்லை. பின் தனம் மதியம் வீட்டிற்கு வருகிறார். தனம் நிறைய வேலை இருப்பதாக சொல்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யாவும் மீனாவும் சண்டை போட்டுக் கொள்வதாக சொல்கிறார்.
தனம் சென்று அவர்களிடம் சமையல் பற்றி கேட்க ஐஸ்வர்யா நான் தான் சமைத்தேன் என சொல்ல குழந்தைகளை பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு இவங்க ஒரு வேலையும் பார்க்கவில்லை என சொல்கிறார். பின் எல்லாரும் சாப்பிட்டு விட்டு இருக்க மீனா இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை என சொல்ல தனம் நான் பாண்டியனை அழைத்து செல்கிறேன் என சொல்கிறார். பின் கண்ணன் தனம் மற்றும் பாண்டியனை கடைக்கு கொண்டு வந்து விடுகிறார்
மறுபக்கம் கதிர் ஹோட்டலில் ஒருவருக்கு டீ கொண்டு வந்து கொடுக்க அதில் சர்க்கரை போட மறந்துவிடுகிறார். அதனால் அந்த கஸ்டமர் கதிரை பயங்கரமாக திட்டுகிறார். உடனே வந்த முதலாளி இனிமேல் இப்படி எல்லாம் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் கதிர் அவர் பேசியதை நினைத்து வருத்தப்பட அங்கே வேலை பார்க்கும் ஒருவர் இதெல்லாம் இங்கே சகஜம் நீ எதுவும் நினைக்காதே என சொல்ல கதிர் கஷ்டத்துடன் வேலையை பார்க்கிறார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்