தமிழகத்தில் நாளை மறுநாள் (17.11.2022) மின்தடை ஏற்படும் பகுதிகள் – எங்கெங்கு தெரியுமா?
தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மின்தடை செய்யப்படும் நிலை உள்ளது. நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின் இணைப்பு துண்டிப்பு, மின்கசிவு ஆகியவை ஏற்பட்டு சில மின் விபத்துக்களும் கூட ஏற்பட காரணமாக அமைகின்றன. இதனால் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்யப்படுகின்றன. அதாவது, எந்தெந்த வயர்களில் மின்கசிவு ஏற்படுகிறது எனவும், எந்தெந்த வயர்களில் பழுது ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து மின்கம்பங்களில் உள்ள பழுதுகள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் நவம்பர் 17ம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கரூர்:
சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.
உச்சத்தை தொட்ட ஆபரணத்தங்கத்தின் விலை – ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் மக்கள்!
பொள்ளாச்சி-முத்தூர்:
அய்யம்பாளையம் மித்தூர், நல்லூர், போடிபாளையம், ராமப்பட்டினம், வடுகபாளையம், மண்ணூர், டி கல்லிபாளையம், ராமநாதபுரம், செல்லாண்டிகவுண்டன்புதூர், குளத்தூர், சக்தி தோட்டம், ஜே.ஜே.நகர், கோல்டன் சிட்டி, சேரன் காலனி, காந்திநகர்
Follow our Instagram for more Latest Updates
ஓசூர்:
சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம்
தூத்துக்குடி, சிப்காட்:
மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திராவிட ரத்னா நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இபி காலனி, ஈ.எம்.யு.