8 வருடங்களாக +2 தேர்வெழுதும் சரஸ்வதி, வெறுப்பில் அப்பா – ‘தமிழும் சரஸ்வதியும்’ இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் இன்று ஹீரோயின் இன்ட்ரோ எபிசோட். அதன்படி சரஸ்வதியின் அப்பா மிகவும் கராறானவர் என்பது புரிகிறது.
“தமிழும் சரஸ்வதியும்” தொடர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரவஸ்தி தான் அதிக மதிப்பெண் எடுத்ததாக கனவு காணுகிறார். பின், சரஸ்வதியின் அப்பா அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். இதனால் பயந்து போய் சரஸ்வதி எழுந்து படிக்க ஆரம்பிக்கிறார். சர்வாஸ்திக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருக்கின்றனர். அவர்கள் இருவரும் அதிகமாக படித்து இருக்க, சரஸ்வதி மட்டும் 12 ஆம் வகுப்பையே 8 வருடங்களாக படிக்கிறார். இதனால் அவரது தந்தைக்கு பிடிக்காத பிள்ளையாக சரஸ்வதி இருக்கிறார்.
தமிழக அரசு ஆசிரியருக்கு விடுப்பு கால ஊதியம் – அரசாணை வெளியீடு!
குடும்பத்தில் உள்ள அவரது பாட்டி மற்றும் அம்மா மட்டுமே சரஸ்வதிக்கு ஆதரவாக பேசுகின்றனர். படிப்பின் அருமை சரஸ்வதிக்கு தெரியாததால் தான் அவர் இது போன்று இருக்கிறார் என்றும் திட்டுகிறார். இதனால் சரஸ்வதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். வீட்டில் இருக்கும் தனது மற்ற இரு குழந்தைகளும் நன்றாக படிப்பதாகவும், சரஸ்வதி மட்டும் இப்படி இருப்பது மனதிற்கு வேதனை அளிப்பதாக இருப்பதாக அவரது தந்தை தெரிவிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
சரஸ்வதியை நினைத்து அவரது பாட்டிக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. சரஸ்வதியின் வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ என்றும் பயப்படுகிறார். இப்படியாக இருக்க, சரஸ்வதி பாட்டு, ஓவிய போட்டி, கோலப்போட்டி என்று பலவற்றில் வெற்றி பெற்று பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார். அதனை தனது தந்தை பாராட்டவில்லையே என்றும் ஏங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.