சதித்திட்டம் போட்ட அர்ஜுன்.. கேள்விக்குறியான ராகினியின் வாழ்க்கை? – தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!
தமிழும் சரஸ்வதியும் சீரியல் நேர மாற்றத்திற்கு பின்னர் கூட நல்ல வரவேற்புடன் தான் சென்று வருகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியலில் முக்கிய திருப்பம் ஒன்று நடக்க உள்ளது.
முக்கிய திருப்பம்:
தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு காரணமாக நடந்த நேர மாற்றத்தால் இரவு 7: 30 மணியில் இருந்து முன்னதாக மாறி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சீரியலை ஆதரிக்க மறந்து விடக்கூடாது என்பதற்காக சீரியலில் புது புது ட்விஸ்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், கோதை சந்திரகலாவின் மகன் ஆதிக்கு ராகினியை திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார். ஆனால் ராகினியை காதலித்த அர்ஜுன் விஷம் குடித்ததால், அர்ஜூனுடன் வீட்டை விட்டு ஓடி விடுகிறார் ராகினி.
Exams Daily Mobile App Download
நிச்சயதார்த்த நாள் அன்று காலை ராகினி இல்லாததை அறிந்து கோதை மிகவும் கோவப்படுகிறார். பின்னர், ராகினி அர்ஜூனுடன் மணக்கோலத்தில் வீட்டிற்கு வருகிறார். இப்படி சீரியலின் காட்சிகள் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்திருக்க மாட்டார்கள், அம்மாவின் சம்மதத்தை வாங்குவதற்காக தான் ராகினி வீட்டிற்கு வந்திருப்பார் என்று முக்கிய திருப்பம் வர இருக்கிறது.
ரோஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. நெருங்கும் கிளைமாக்ஸ்- சன் டிவி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
Follow our Instagram for more Latest Updates
பல போராட்டங்களுக்கு பிறகு ராகினி அர்ஜுன் திருமணம் நடந்து விடும். ஆனால் அர்ஜுன் கோதையின் குடும்பத்தை பழிவாங்க தான் ராகினியை திருமணம் செய்திருப்பார் என்பது போன்று காட்சிகள் இனி சீரியலில் வர உள்ளது. இதனால் இனி வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை அளிக்கும் வகையில் இருக்கும் என்பது தெளிவாகிறது.