தமிழ் தம்பி கார்த்தியை உடனடியாக திருமணம் செய்ய வற்புறுத்தும் சந்திரகலா – இன்றைய எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் இன்று சரஸ்வதி தன்னை மாப்பிள்ளை பார்த்து விட்டு சென்றவர்கள் சொன்னதை நினைத்து வருந்துகிறார். தமிழின் தம்பி கார்த்தியை உடனடியாக திருமணம் செய்ய வசுந்தராவின் தாய் சந்திரகலா வற்புறுத்துகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதிக்கு மாப்பிள்ளை பார்த்தது தவறானது என்று அவரது அப்பா சரஸ்வதியின் பாட்டியை திட்டுகிறார். இதனால் மனம் உடைந்து போகும் சரஸ்வதி தான் இனி நன்றாக படிக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். அவரை அவரது பாட்டி ஊக்கப்படுத்துகிறார். பின், கார்த்திக்கை சந்திக்க வேண்டும் என்று அவரது காதலி வசுந்தராவின் தாய் சந்திரகலா கூறுகிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
இதனால் அவரை பார்க்க என்று கார்த்திக் அவர்களது வீட்டிற்கு செல்லுகிறார். வசுந்தராவின் அம்மா சந்திரகலா சப் கலெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். அவர் வீட்டிற்கு வந்ததும் கார்த்திக்கிடம் இருவரது திருமண விஷயம் பற்றி பேசுகிறார். கூடிய விரைவில் வசுந்தரவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தில் சொல்லி இருப்பதாகவும், அதனால் கார்த்தியின் வீட்டில் உடனடியாக பேசும்படியும் அவரை வற்புறுத்துகிறார்.
TN Job “FB Group” Join Now
இதனை கேட்டு கார்த்தி தான் பயந்து விடுகிறார். தனது அண்ணனின் திருமணம் முதலில் நடைபெற வேண்டும். பின்பு தான் தனது திருமணம் என்று மனதில் நினைத்து கொள்கிறார். அப்போது வசுந்தராவின் தம்பி ஆதி தனது அம்மாவிடம் தான் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பணம் தயார் செய்து தர வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் கடுப்பாகும் சந்திரகலா முடியாது என்று மறுக்கிறார். கத்தியை வைத்து ஆதி மிரட்டியதும், உடனடியாக பணத்தினை எடுத்து வந்து நீட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.