ஜனவரி மாதத்தில் மூன்றாவது முறையாக மதுபான கடைகள் மூடல்? அரசு பரிசீலனை!
தமிழகத்தில் காந்தி நினைவு தினம் ஜனவரி 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ‘டாஸ்மாக்’ மது கடைகளுக்கு விடுமுறை விடுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அது மட்டுமில்லாமல் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மே தினம் ஆகிய தினங்களுக்கு மதுக்கடைகள் விடுமுறை விடப்பட்டும். மேலும் இந்த மாதம் 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான கடைகள் செயல்படவில்லை.
தமிழகத்தை தாக்கும் புதிய ஆபத்து – எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் வருகிற ஜனவரி 30 ஆம் தேதி காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது, அன்றைய தினம் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. அன்றைய தினம் மதுபான கடைகள் மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.