தமிழகத்தில் இரவு, வார இறுதி ஊரடங்கு ரத்து? உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டு உள்ள இரவு மற்றும் வார இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவினை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஊரடங்கு ரத்து?
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நேரங்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பிற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஏப்ரல் 26ம் தேதி முதல் மால்கள், திரையரங்குகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. சில மாநில அரசுகள் முழு ஊரடங்கு உத்தரவினையும் பிறப்பித்துள்ளன. இரவு நேர ஊரடங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துமா? என்பது கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ராம்குமார் என்பவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகும். ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு ஆகியவற்றால் கொரோனா பாதிப்பு குறையும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் கூறப்படுகிறது.