தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்
விதர்பா முதல் கேரளா பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்? உரிமையாளர்கள் பாதிப்பு!
நாளை (5/05/2021) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
நாளை மறுநாள் (6/05/2021) மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்