தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

0
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஓரிரு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தின்‌ மேல்‌ 1.5 கிலோமீட்டர்‌ உயரத்தில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

12.05.2021: மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதி, தருமபுரி, சேலம்‌, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர்‌, வேலூர்‌, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

TN Job “FB  Group” Join Now

13.05.2027: மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதி, தருமபுரி, சேலம்‌, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர்‌, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

ரேசன் கார்டுகளில் மொபைல் எண்ணை மாற்றும் எளிய வழிமுறைகள்!!

14.05.2021: நீலகிரி, கோவை, தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னல்‌ காற்றுடன்‌ (30 முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌) கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

இதனால் விசாயிகள்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

15.05.2021: மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, தென்‌ கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னல்‌ காற்றுடன்‌ (30 முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌) கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு – சபாநாயகர் அறிவிப்பு!!

16.05.2021: மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, தென்‌ கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னல்‌ காற்றுடன்‌ (3௦ முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌) கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌, புதுவை பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌

வெப்பநிலை முன்னறிவிப்பு:

12.05.2021 : தென்‌ மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால்‌ திருவள்ளூர்‌, வேலூர்‌, காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர்‌ மற்றும்‌ திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை 2 முதல்‌ 3 டிகிரி செல்‌சியஸ்‌ வரை உயரக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

திருப்பதி கோவில் தரிசன முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் அறிவிப்பு!!

கடந்த 24 மணி நேரத்‌தில் மழை அளவு (சென்டிமீட்டரில்‌):

குழித்துறை (கன்னியாகுமரி) 7, தக்கலை (கன்னியாகுமரி) 6, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சோழவந்தான்‌ (மதுரை) தலா 5, வால்பாறை (கோவை, கலியால்‌ (கன்னியாகுமரி) தலா 4, நாகர்கோயில்‌ 3, ஆண்டிபட்டி (மதுரை, சன்னக்கல்லார்‌ (கோவை )தலா 2.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

12-05-2021: தென்மேற்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

13-05-2021: குமரிக்கடல்‌ பகுதி, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, லட்சத்தீவு மற்றும்‌ மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மத்திய அரசு ஊழியர்களின் DA, DR உயர்வு – தொடரும் காத்திருப்பு!!

தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌.

வரும்‌ 14-05-2021 அன்று தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில்‌ புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன்‌ காரணமாக

14.05.2021: குமரிக்கடல்‌ பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌.

செவிலியர் காலிப்பணியிடங்கள் – நேர்முக தேர்வு இடமாற்றம்!!

15.05.2021,16.05.2021: (காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்‌ அதனை தொடர்ந்து வட மேற்கு திசையில்‌ நகர்ந்து புயலாக வலுபெறக்கூடும்‌) இதன்‌ காரணமாக குமரிக்கடல்‌ பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல்‌ தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 60-70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 80 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறியுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!