தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!!லை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் சில இடங்களில் கடந்த வாரம் முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயில் காலங்களில் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று வெளியிட்ட வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். மேலும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் உள்ள பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

பான் & ஆதார் கார்டு இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!!

அதிகபட்ச வெப்பநிலைக்கான முன்னறிவிப்பு:

ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதிகளில் வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29.03.2021: தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40கி.மீ வேகம் முதல் 50கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

இந்தியாவில் ஒரே நாளில் 68 ஆயிரம் பேருக்கு கொரோனா – 291 பேர் உயிரிழப்பு!!

30.03.2021: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

31.03.2021: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிகடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது இதன் காரணமாக 29.03.2021 முதல் 30.03.2021 தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வரை வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!