தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழகத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் தற்போது இந்த லேசான மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
மதுரை காமராஜர் பல்கலை இணையவழி படிப்புகள் – யுஜிசி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
மேலும் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதியை நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.