தமிழகத்தில் ஜூலை 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் ஜூலை 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 15 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் ஜூலை 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.

வானிலை அறிக்கை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி,

11.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, தேனி மாவட்டத்துல்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

12.07.2021: நீலகிரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கோயம்புத்தூர்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!

13.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மற்றும்‌ ஈரோடு, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேகமாக வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

14.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

15.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒருல இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்ககடல்‌ பகுதிகள்‌:

11.07.2021: அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌, தமிழ்நாட்டின்‌ கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ ஆந்திர கடலோர பகுஇகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

11.07.2021,12.07.2021: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தெற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

11.07.2021 முதல்‌ 13.07.2021 வரை: கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள்‌, லட்சத்‌தீவு மற்றும்‌ அதனை ஓட்டிய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

11.07.2021 முதல்‌ 15.07.2021 வரை: தென்‌ மேற்கு, மத்‌திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!