தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் வரை (0.9 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

13.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

14.04.2021:

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – அரசு வட்டாரங்கள் தகவல்!!

15.04.2021:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

16.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி கோயம்பத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 14) பொது விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!

17.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 6 செ.மீ, குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தலா 2 செ.மீ பதிவாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!