தமிழகத்தில் நாளை (நவ. 16) உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் நாளை (நவ. 16) உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை (நவ. 16) உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை (நவ. 16) உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை (நவம்பர் 16) தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பல மாவட்டங்களில் ஏகப்பட்ட சேதாரங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து இருக்கிறது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவம்பர் 16) உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!