தமிழகத்தில் இன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிதமான மழை:
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்ப கட்டத்தில் இருந்த பொழுதில் இருந்து இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. கத்திரி வெயிலில் இருப்பதை போன்று பல மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தொட்டது. இதனால் மக்கள் இந்த ஆண்டு கோடை காலத்தை நினைத்து மிகவும் அச்சத்தில் இருந்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைதோறும் இனி ஊழியர்களுக்கு விடுமுறை? மாநில அரசு விளக்கம்!
அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போல்,இன்றும் நாளையும் தென் தமிழகம், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி அன்று தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் மற்றும் கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும், 13-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்துள்ளது.