தமிழகத்தில் மே 3ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு? பொதுமக்கள் குழப்பம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தினசரி அதிகரித்து வரும் நிலையில் மே 3ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கு:
தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. எனவே பிற மாநிலங்களை போன்று தீவிர கட்டுப்பாடுகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று (ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதுமட்டுமின்றி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, நேர கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மிசோரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
இதேபோல் தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் வருகிற மே 2ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதுவரை முழு ஊரடங்கு கொண்டு வரப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதனால் மே 3ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூரவ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முழு ஊரடங்கு கொண்டு வரப்படாது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.