தமிழகத்தில் உள்ள தட்டச்சு, கணினி பயிற்சி மையங்கள் திறப்பு – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ளதால் தட்டச்சு மற்றும் கணினி பள்ளிகளை திறந்து செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பே 20 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
TN Job “FB Group” Join Now
மேலும் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு தட்டச்சு, கணினி பள்ளிகள் சங்க மாநில தலைவர் எல்.செந்தில் தமிழக தலைமை செயலருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற 2,200 தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.
இதனால் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். இந்த பயிற்சிகளை ஆன்லைன் மூலமாகவும் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளிடம் இருந்து எந்த வித கட்டணமும் வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் வாடகை கட்டடங்களாக உள்ளது. அதனால் வாடகை கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி – முதன்மை செயலாளர் அறிக்கை!!
மேலும் 2020 பிப்ரவரி மாதம் தேர்வுக்கு தயாராகி உள்ள 1.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். அரசின் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றி போதிய இடைவெளியில் ஒரு மணி நேரம் மட்டும் பயிற்சி வழங்கப்படுவது போல தளர்வுகள் உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.