தமிழகத்தில் மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடல் – கொரோனா விதிமுறைகள் மீறல்!

0
தமிழகத்தில் மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடல் - கொரோனா விதிமுறைகள் மீறல்!
தமிழகத்தில் மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடல் - கொரோனா விதிமுறைகள் மீறல்!
தமிழகத்தில் மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடல் – கொரோனா விதிமுறைகள் மீறல்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் கொடைக்கானல் சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. ஆனால் பயணிகள் கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றாததால் மீண்டுமாக அவற்றை மூடுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சுற்றுலா தலங்கள் மூடல்

கொரோனா 2 ஆம் அலையானது தமிழகத்தில் தற்போது வெகுவாக குறைந்து வரும் சூழலில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் 35 ஆயிரத்துக்கும் அதிகமாக தினசரி புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் கொரோனா புதிய பாதிப்பானது தற்போது 5 ஆயிரத்துக்கும் கீழாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

WhatsApp ல் ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

அதன் படி தமிழகத்தில் நேற்று (ஜூலை 6) ஒரு நாளில் மட்டும் 3,479 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததை தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி முதல் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி ஒவ்வொரு கட்டமாக அளிக்கப்பட்ட தளர்வுகளின் படி, தற்போது அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவைகளை துவங்கவும், மதவழிபாட்டு தலங்களை திறக்கவும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்டங்களுக்கு இடையேயான இ-பதிவு நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டது.

ஜூலை 8 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி – 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்!

அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது போக்குவரத்துக்கான இ-பதிவு நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வரத்து மீண்டுமாக துவங்கியது. இந்நிலையில் திறக்கப்பட்டுள்ள கொடைக்கானல் சுற்றுலா பகுதிகளை ஆர்.டி.ஓ முருகேசன் நேற்று (ஜூலை 6) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கொடைக்கானல் பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்காக பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய நடைமுறைகள் – ஆணையர் அறிவுறுத்தல்!

ஆனால் ஊட்டி, ஏற்காடு பகுதிகளில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. இதனால் கொடைக்கானலுக்கு அதிகளவு மக்கள் வரத்து காணப்பட்டது. அவற்றில் பலர் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாததால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தலங்கள் மீண்டுமாக மூடப்படுகின்றன. அதே நேரத்தில் வேறு அலுவல்கள் நிமித்தமாக கொடைக்கானலுக்கு வரும் நபர்களுக்கு எவ்வித தடையும் இல்லை’ என தெரிவித்துள்ளார். இதனால் கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் சிறிது ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!