தமிழகத்தில் சுற்றுலா மேம்பாட்டு குழு அமைப்பு – 16 பேர் நியமனம்!
தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலா இயக்குனர் தலைமையில் 16 பேர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
சுற்றுலா துறை :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் வணிக வளாகங்களும், பல்வேறு நிறுவனங்களும் இயங்க அரசு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு வலியுறுத்துகிறது. நோய் தடுப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்காலம் நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்த ஊரடங்கால் அனைத்து துறைகளும் மக்களின் நடமாட்டம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை கடந்த ஒரு ஆண்டு காலமாகவே சரிவை சந்தித்து வருவதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். மக்கள் விடுமுறை நாட்களில் குடும்பங்களுடனும் தனது நண்பர்களுடனும் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களுக்கு செல்வர்.
ஆதார் கார்டில் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யும் முறைகள்!
தற்போது கொரோனா பரவலால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா தளங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அந்த சுற்றுலா தளங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மக்கள் வருகை இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க சுற்றுலா இயக்குனர் தலைமையில் 16 பேர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.